Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது: பிரதமர் மோடி

நவம்பர் 29, 2021 11:10

புதுடெல்லி: குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது.

2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.

3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.

4. குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

5. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பரவிவரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்